Saturday, September 13, 2025

சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் அதிரை அப்துல் ஜப்பார்! துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் சமூக நலன் அடை மொழியுடன் ஊரில் நடக்கும் நிகழ்வுகளை காணொளியாகவும்,
குரல் வடிவிலும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருபவர் அப்துல் ஜப்பார்.

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், அரசியல் டைம்ஸ் என்கிற வாராந்திர இதழின் வாட்ஸ் ஆப் குழுமம் இவரை அக்குழுமத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது, இதனால் ஆத்திரமடைந்த அப்துல் ஜப்பார், சம்பந்தப்பட்ட இதழின் நிருபரை தொடர்பு கொண்டு அதன் ஆசிரியரை எழுத முடியாத வார்த்தைகளால் திட்டியும், இரு சமூகத்திற்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

இதனை கருத்தில் கொண்டு அவ்விதழின் செய்தி ஆசிரியர் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க கூறியதன் அடிப்படையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் அப்துல் ஜப்பார் தன்னை ஒரு நிறுவன பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்டு பல்வேறு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டு வருவது குறித்தும், குறிப்பிட்டு இருக்கின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் டைம்ஸ் இதழ் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img