கடற்கரை நகரான அதிரையில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பம் முதலே அதிகமாக உணரப்பட்டது. இதன் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை பெரும்பாலும் பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உச்சப்பட்ச வெயில் இன்று 107.6 ஃபேரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அதிகபட்ச வெப்பம் மே மாதத்தில் 105.8 ஃபேரன்ஹீட் ஆகும். அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பிறகு அதிரையில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச வெப்பம் பதிவாகி இருப்பதால் வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
More like this
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...