Tuesday, May 21, 2024

பட்டுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் – ஆ. ராசா எம்பி சிறப்புரை!!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் என திமுகவினர் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மற்றும் பட்டுக்கோட்டை நகர திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டையில் அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலை அருகில் நடைபெற்றது.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா. அண்ணாதுரை MLA தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர கழக செயலாளர் S.R.N. செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். திமுக துணைப் பொதுச்செயலாளரும்நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

மேலும் திமுக மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் நா. அசோக்குமார் MLA, மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் பழஞ்சூர் கே. செல்வம் மற்றும் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...