Wednesday, March 18, 2026

காவிரி விவகாரம்.. அதிரையில் முழு கடையடைப்பு போராட்டம்!!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்திவடாத கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நீரை பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடி பணியை தொடங்கவும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பல லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே விவசாயிகளோடு வியாபாரிகளும் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து விவசாய சங்கங்கள், திமுகவின் விவசாய அணி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன்படி கடைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதலே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால், முக்கிய சாலைகள் மற்றும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.


spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img