Friday, March 20, 2026

அதிரை: 6வது வார்டின் அவல நிலை – தேங்கிய நீரில் இடறி விழுந்த முதியவர் (வீடியோ)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டடு சேர்மன் வாடியில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலை மேம்பாட்டு பணியில் போது பழையை சாலையை பெயர்த்து எடுக்காமல் அதன்மீதே சாலையமைத்ததால் வந்த வினை என அப்பகுதி மக்கள் புலம்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றிரவு பெய்த மழையில் குட்டைபோல் நீர் தேங்கியுள்ளது, இதனால் பாதசாரிகள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த நீரை கடக்கும் ஒவ்வொருவரும் அம்சத்துடன் கடக்க நேரிடுகிறது என அருகாமையில் உள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி இன்று அவ்வழியே இருசக்கர வாகனத்தில் கடந்த ஒரு முதியவர் மழை நீரில் இடறி விழுந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்ப்குதியை சேர்ந்த செல்வம் என்பவர் கூறுகையில் 6வது வார்டில் உள்ள சமூக ஆர்வலர் ஊரில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளையும் படம் பிடித்து போடுகிறார் என்றும் இந்த மெகா பள்ளத்தாக்கு மட்டும் அவரின் கண்ணுக்கு புலப்படாதது வியப்பாக உள்ளது என்றார்.

ந்கராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் இடையில் நிற்கும் கால்வாய் பணிகளை முடித்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிகை விடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img