Sunday, May 5, 2024

Big breaking: அதிரையில் வரும் 25ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது 110kv மின்நிலையம்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெருகிவரும் மின் பயன்பாடு மற்றும் நிலவும் குறைந்த மின் அழுத்தத்தை போக்கும் வகையில் 110kv துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த கா.அண்ணாதுரை, இப்பகுதி மக்களின் மின் தேவை குறித்து சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதனை ஏற்று கடந்த ஆண்டு நவம்பரில் அதிரையில் 110kv துணை மின் நிலைய கட்டுமானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் அந்த பணி விரைவில் முடிவடைந்து அக்டோபர் 25ம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட அதிரை 110kv துணை மின் நிலைய திட்டத்தை சட்டப்பேரவையில் வலியுறுத்தி அதற்கு புத்துயிர் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பொதுமக்கள் நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...