Saturday, September 13, 2025

அதிரையில் டெங்க்கு உரம் போடும் நகராட்சி ! ஆழ்ந்த உறக்கத்தில் நிர்வாகம் உறங்காத மக்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

நடவடிக்கை எடுக்குமா ? சுகாதார துறை

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் #டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் நாள்தோறும் பலர் உயிரிழந்து வருகிறார்கள் என ஊடகங்கள் கூறுகிறது. இதனால் மாநில சுகாதார துறை பம்பரமாக சுழன்று கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் விதி விலக்காக அதிராம்பட்டினம் நகரில் மட்டும் டெங்குக்கு உரம் போட்டு நோயை பரப்ப முயற்ச்சித்து வருவதாக தெரிகிறது. நகராட்சி அந்தஸ்து பெற்ற அதிரையில் ஆதிகாலத்து புகை இயந்திரம் இரண்டு மட்டுமே உள்ளது. காலை வேளைகளில் பெயருக்காக சில இடங்களில் அடிக்கப்படும் புகையால் வீதியில் உறங்கு கொசுக்கள் கூட் வீட்டின் கரைகளில் வந்து ஒளிந்து கொள்கிறது.

இரவு வேலைகளில் அசந்து தூங்க எத்தனிக்கும் ஒவ்வொருவரையும் தனது கூறான ஊசி மூலம் கொல்லாமல் கொன்று வருகிறது.

இதற்கு ப்யந்து ரசாயன ஊதுபத்திகளை நாடும் மக்கள் சுவாச கோளாரால் சிக்குண்டு வருகிறார்கள்.

“அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் முறையாக கொசு ஒழிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றும், குறிப்பாக கொசு ஒழிப்பிற்கென இதுவரை மருந்துகள் இல்லை என்றும் புகை வழியாக கொசுக்குகளுக்கு ஆண்மை இழப்பு மட்டுமே செய்யப்படும் என கூறப்படுகிறது.”

கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்றால் அபேட் கெமிக்கல் கலந்த நீரை சாக்கடை மற்றும் தேங்கிய நீர்களில் தெளித்தால் மட்டும் புதிய லாவா கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க இயலும் என நகராட்சி ஊழியர் ஒருவர் தெரிவிக்கிறார்.

கொசு ஒழிப்பில் அக்கரை காட்ட வேண்டும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன் அஸ்வா என்கிற தன்னார்வ சமூக அமைப்பு நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்திருந்த நிலையில் நிர்வாகம் மெத்தனபோக்காக நடந்து கொள்வதாக அதன் அமைப்பாளர் அப்பாஸ் கூறுகிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img