Sunday, February 1, 2026

அதிரையில் 3வயது சிறுவனை கடித்த வெறிநாய் கூட்டம்.., மெத்தன போக்கில் அதிரை நகராட்சி…?

spot_imgspot_imgspot_imgspot_img

.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வெறி நாய்கள் அதிகம் உலா வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட கோரிக்கைகளை முன்வைததும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், இன்றைய தினம் அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகாமையில் சதாம் நகர் பகுதியில் ஆதில் என்ற மூன்றரை வயது பச்சிளம் சிறுவனை வெறி நாய்கள் சூழ்ந்து கடித்துள்ளது.

சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த சிறுவனின் பெற்றோர் அந்த வெறிநாய் கூட்டத்திடமிருந்து குழந்தையை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சதாம் நகர்(மழவேனிற்காடு ஊராட்சி) அருகே உள்ள அதிரை பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், அதிராம்பட்டினத்திலும் இதேபோன்று சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமல் பல்வேறு விஷயங்களில் மெத்தனபோக்கில் அதிரை நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்னிலையில் சதாம் நகர் போன்ற சில பகுதிகளை அதிரை நகராட்சியுடன் இணைக்க முயற்சித்து வருகிறது குறிப்பிடுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img