Sunday, April 28, 2024

தஞ்சையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சையில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாம் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்களில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மேலும் இம்முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் துறையில் கல்வி பயின்றவர்கள் பங்குபெறலாம்.

மேலும் விபரங்களுக்கு :- 04362-237037

இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...