தமிழகத்தில் தீபாவளி முடிந்து இரண்டு வார காலங்கள் ஆகிவிட்ட நிலையில், அதிரையில் முக்கிய பிரதான சாலையாக உள்ள ECRல், இரவு நேரத்தில் சுமார் 7 புள்ளிங்கோக்கள் பைக்குகளில் பயங்கர சப்தத்துடன் சீறிப்பாய்ந்தும், சாலையின் நடுவே தங்கள் பைக்குகளை நிறுத்தி வெடிகளை வெடித்து, பட்டாசுகள் கொளுத்தி வருவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக இது போன்ற செயல்களை செய்து வரும் அதிரை புள்ளிங்கோக்களின் அடடூழியத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.