அதிரையர்களுக்கு இனிப்பு பொங்க்ல் அள்ளி கொடுத்த ரயில்வே – சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு !
சென்னை எழுபூரில் இருந்து தென்காசிக்கும் (வண்டி எண் 06069) மறுமார்க்கத்தில், தென்காசி முதல் எழும்பூருக்கு (வண்டி எண் 06070) சிறப்பு ரயில்கள் இயகப்பட்டு வந்தன.
இந்த ரயிலுக்கு அமோக வரவேற்பு இருந்து வந்த நிலையில் சேவை காலத்தை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் நல சங்கத்தினர் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் சிறப்பு ரயிலாக 2024 ஜனவரி மாதம் இறுதி வரை இந்த சிறப்பு ரயில் சேவையில் இருக்கும் என தென்னக ரயில்வே அறிவித்து இருக்கிறது.
இதற்கான முன் பதிவு இன்று காலை 10மணி முதல் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள், தென்னக இரயில்வே முன்பதிவு மையங்களில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.