Saturday, September 13, 2025

அதிரை : முறையற்ற நகராட்சி கடைகளின் ஏலத்தை ரத்து செய்ய,மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர் மனு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள 24 கடைகளை ஏலம் விட்டதாக பொய் கூறி தமக்கு சாதகமாக உள்ள சிலருக்கு ஒதுகீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது கழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி களங்கமற்ற ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கி உள்ளதாக உண்மை உடன்பிறப்புக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.
மேலும், வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்து வருகிறார்கள்.

இதுகுறித்து 2வது வார்டு உறுப்பினரான சித்தி ஆயிஷா அஸ்லம் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை எழுதியுள்ளார் அதில், 24 கடைகளுக்கான பொது ஏலத்தை ரகசியமாக செய்து கொண்டுள்ளனர், அவர்களுக்கு தேவையான ஆட்களுக்கு சட்டத்தை மீறி ஒதுக்கீடு செய்துள்ளனர் என்பன உள்ளிட்ட புகார்களை தெரிவித்து சட்டவிரோத ஏலத்தை ரத்து செய்து உத்தரவிட கோரியும், மீண்டும் முறையாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திய பின்பு குலுக்கலோ,அல்லது பகிரங்க ஏலமோ நடத்திட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img