அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 24 கடைகள் முறைகேடாக ஏலம் விடப்பட்டது தொடர்பாக இன்றைய மன்ற கூட்டத்தில் அதிமுகவின் 16வது வார்டு உறுப்பினர் நான்சி பிச்சை அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார், அதற்கு முறையான பதில் ஏதும் இல்லாததால் மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்பு முறையில் கடைகளுக்கான தீர்மானத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார். அதற்க்கு தலைவர் அவர்கள் நீங்கள் ஒருவர்தான் இத்தீர்மானத்தை எதிர்கிறீர்கள் என கூறியுள்ளார்.
இதன்பின்னர் 27வது வார்டு அதிமுக உறுப்பினர் சேதுராமன் மற்றும், நான்சி பிச்சை ஆகியோர் இத்தீர்மானத்தை எதிர்த்து வெளி நடப்பு செய்துள்ளனர்.