அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பணிபுரிந்து வந்தார். மிகுந்த சமூக சிந்தனை கொண்ட சங்கை முகம்மது, கடந்த சனிக்கிழமை சாலை விபத்தில் சிக்கினார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நள்ளிரவு மரணமடைந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.