Wednesday, March 18, 2026

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.

தொடர்ந்து இடைவிடாமல் பெய்த மழையால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இரண்டு நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் அதிரையில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக அதிகாலை முதலே மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையே அதிராம்பட்டினத்தில் மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அதிரையில் உள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில் பேரிடர் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்படும் மக்கள் அவசரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு கீழ்கண்ட பேரிடர் மீட்புக்குழுவை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img