தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் இடம்பெறவில்லை என்ற குறை இருந்துவந்த நிலையில், ரயில் டிக்கெட்டுகள் தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளன. முதலில், சென்னை சென்ரல்,திருச்சி, சேலம், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே இது அமலுக்கு வந்துள்ளது. விரையில் மற்ற ரயில் நிலையங்களிலும் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும் எனவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.கேரளாவில், திருவனந்தபுரம்,எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 4 ரயில் நிலையங்களில் மலையாள மொழியிலும் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழியிலும், ஆந்திராவில் தெலுங்கு மொழியிலும் ரயில் டிக்கெட்டுகள் அச்சிட்டு வழங்கப்படுகிறது