Home » ஐபிஎல் 2018 சாம்பியன்ஸ் கோப்பையை தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ..!

ஐபிஎல் 2018 சாம்பியன்ஸ் கோப்பையை தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ..!

0 comment

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மும்பையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, வில்லியம்சன் 47, யூசுப் பதான் 45 ஆகியோரின் உதவியுடன் 178-6 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் கோப்பை, என்ற கனவுடன் களமிறங்கிய சென்னை அணியின் டு ப்ளசி 10, ரய்னா 32 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய சென்னை சிங்கம் வாட்சன் சிக்சரும், பவுண்டரியுமாக தெறிக்க விட்டு வாழ்நாள் இன்னிங்சை ஆடினார்.

51 பந்துகளில் சதம் கடந்து, கூலாக பைனலை சென்னை வசம் ஆக்கினார் வாட்சன். ராயுடு 12 ரன்கள் எடுத்து பக்கபலம் தந்தார்.

இறுதியில் 18.3 ஓவர்களில் 181-2 ரன்கள் எடுத்து இந்த ஆண்டு கோப்பையை வென்றது சென்னை அணி!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter