73
ரம்ஜானுக்காக நாளை(ஜூன் 15) பள்ளி , அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால் , நாளை மறுநாள்(ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்திருந்தார். இதனையடுத்து நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை பள்ளிகள் ,அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் , நாளை மறுநாள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..