Home » டை பிரேக்கர் : பட்டுக்கோட்டையை விரட்டிய நாகூர்!!

டை பிரேக்கர் : பட்டுக்கோட்டையை விரட்டிய நாகூர்!!

0 comment

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் கௌதியா 7s நாகூர் – விவேகானந்தா பட்டுக்கோட்டை அணிகள் மோதின.

முன்னதாக கீழத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

ஆட்டம் ஆரம்பித்ததும் அரையிறுதிக்கு செல்லும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் பரபரப்புடன் பந்தை துரத்தினர்.

இருந்த போதிலும் நாகூர் அணியினரின் கால்களிலே பந்து சுழன்று கொண்டிருந்தது.

எனினும் கடைசி வரை இரு அணியாலும் கோல் ஏதும் போட முடியாமல் சமநிலையில் ஆடி முடித்தன.

இதனால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த டை பிரேக்கரில் நாகூர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பட்டுக்கோட்டைக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்க விடாமல் விரட்டியது.

இப்போட்டியில் நாகூர் அணியினருக்கே ரசிகர்களின் ஒருமித்த ஆதரவு இருந்தது குறிப்பிடதக்கது.

நாளைய தினம் SSMG அதிரை – தென்னரசு பள்ளத்தூர் அணிகள் மோதுகின்றனர்.

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter