Home » வாகனதிருட்டு வழக்கில் அதிரை இளைஞர் கைது !

வாகனதிருட்டு வழக்கில் அதிரை இளைஞர் கைது !

0 comment

திருத்துறைப்பூண்டி அருகே வாகன சோதனையில் பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு வாலிபர்களை போலிசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 12 பைக்குகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடைபெறுவதாக போலிசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

ஆனால் இரு சக்கர வாகனத்தை திருடுபவர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்காதநிலையில், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முத்துப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த ஆகாஷ் (19) , கொய்யாதோப்பு வினோத் (22) , அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகமது அசின் (22) , முத்துப்பேட்டை பேட்டை வாசீம்கான் (23) என்பதும் இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் , நாகை மாவட்ட பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் பைக் திருடியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து நான்கு பேர் அளித்த தகவலின் பேரில் 12 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter