Wednesday, May 8, 2024

மருத்துவரை தாக்கியதால் திருவாரூர் பா.ஜ.க தலைவர் கைது..!!

Share post:

Date:

- Advertisement -

 

அரசு மருத்துவரை தாக்கியதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா கைது செய்யப்பட்டுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார துறை மூலம் மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன இதனை உட்கொண்ட, பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கடந்த 29 ஆம் தேதி வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிய சென்ற பாஜக தலைவர் பேட்டை சிவா, அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் அரவிந்த் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவரை பேட்டை சிவாவுடன் வந்த அவரது ஆதரவாளர்கள் தாக்கினர்.

இதுகுறித்து அரவிந்தன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து பேட்டை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மற்றும் பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து பாஜக மாவட்டத் தலைவர் பேட்டை சிவாவை இன்று போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...