அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை எதிரே கிராணி மைதானம் உள்ளது. இதில் இளைஞர்கள் மாலை வேலையில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடி வருகின்றனர். நோன்பு நேரம் என்பதால் கூடுதல் நேரம் எடுத்து விளையாடிவிட்டு வீடு திரும்புகின்றனர்.
இந்த நிலையில் நேற்று விளையாடிவிட்டு திரும்பிய சலாஹுதீன் என்ற வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். தெரு விளக்குகள் இல்லாததால் வழியில் வெட்டப்பட்ட ராட்சத பள்ளம் கண்ணுக்கு தெரியவில்லை, இதனால் அந்த வாலிபர் பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது காலில் பலத்த காயமும் வாகன சேதமும் ஏற்பட்டு உள்ளன.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் சலாஹுதீன் புகார் அளித்த நிலையில் அந்த பள்ளம் யாரால் எதற்கு தோண்டப்பட்டவை என எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர்.