திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி பட்டுக்கோட்டை திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர பொறுப்பாளர் திரு, எஸ். ஆர். என். செந்தில்குமார், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர், என். ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர், எம். கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீதர், ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களின் இரயில்வே குழு தலைவரான திரு.திருச்சி என்.சிவா அவர்களை சந்தித்து திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதைக்கு தேவையான கேட்கீப்பர்களை நியமிக்கவும், காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு வண்டிகள், மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு மீட்டர்கேஜ் ஓடியது போல ரயில்களை ,வருகின்ற தீபாவளிக்கு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க கோரி கோரிக்கை மனுவை அளித்தனர்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





