பருவமழையின் தீவிரம் காரணமாகவும், கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினத்திற்கு வந்து சேர்ந்து சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அவ்வாறு ஓடி கடலில் கடக்கும் நீர் அதிரையில் உள்ள குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அதிரையில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அதன்படி பல அடி ஆழம் கொண்ட அதிரையில் உள்ள குளங்களில் சிறுவர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி குளித்து வருகின்றனர்.
குளங்களில் தண்ணீர் அதிகமாக காணப்படுவதால் சிறுவர்கள் குளிக்கும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பெற்றோர்கள் விழிப்புடன் செயல்பட்டு, தங்கள் குழந்தைகளுக்கு அதிரையில் உள்ள குளங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.