குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் சென்னை மண்ணடியில் முஸ்லீம் லீக்கின் கட்சியின் முஸ்லீம் மாணவர் பேரவை(MSF) சார்பில் நேற்று குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
இதில் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் MLA, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
இம்மாநாட்டில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.