Saturday, February 7, 2026

இன்று முதல் அத்தியாவசிய கடைகள் திறப்பதில் புதிய நடைமுறை அமல்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை இன்று முதல் ஏப்ரல் 14 வரை பிற்பகல் 2.30 மணிக்கு மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இவை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

பெட்ரோல் பங்குகள் காலை 6 மணிமுதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். அதே சமயம் அரசு வாகனங்கள், அவசர பணி ஊர்திகள் போன்றவற்றுக்கு தனியாக பெட்ரோல் பங்குகள் முழு நேரமும் இயங்கும்.
அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகை போன்ற பொருட்களை விற்பனை செய்யும் கோயம்பேடு சந்தை உட்பட அனைத்து கடைகளும் 6 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும்.

ஆனாலும் மருந்து கடைகள், பார்சல் மட்டும் வழங்கும் உணவகங்கள் முழுநாளும் செயல்பட தடையில்லை. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்க ஸ்விகி, ஸோமோட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை விநியோகிக்கும் செயலிகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
காலை மதியம் இரவு என மூன்று வேளையும், நேரக் கட்டுப்பாடுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img