Home » அதிரை: காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது !

அதிரை: காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது !

0 comment

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் நகரில் பரவும் கொரோனா தொற்று காரணமாக ஏராளமான தற்காலிக கணக்கெடுப்பு, தூய்மை பணிக்கு என பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முழு கடையடைப்பு அமலில் இருப்பதால் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் உள்ளது.

இதனை கருத்தில் கொண்ட அரசியல் கட்சிகள் தன்னார்வ தொண்டு அமைப்புகள் உணவுகள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

அதன் படி இன்று நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் பேரூராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் தமீம் அன்சாரி,முன்னாள் தலைவர் ஜலீலா முஹைதீன், கார்த்திகேயன், நகர துணைத்தலைவர் சாமி நாராயண சாமி, நகர பொருளாளர் திலகராஜ கட்டபொம்மன்,துணை செயலாளர் எம் ராஜேந்திரன் மற்றும் கட்சியின் முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter