அதிராம்பட்டினம் நரிக்குறவர்கள் கொரோனா ஊரடங்கால் பசி பட்டினியால் வாழ்ந்து வருவதாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தியாக வெளியானது.
இதனை அடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்ற இச்சம்பவம், இந்தியன் ரெட்கிராஸ் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்க ஆணையிட்டார்.
அதன்படி இன்று அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா கே இதிரீஸ் அஹமது மற்றும் ஆயுட்கால உறுப்பினர் சுஐப்,சுதாகர்,மன்சூர் ஆகியோர் நரிக்குறவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்கள்.