அதிராம்பட்டினம் வாய்க்கால்தெரு தண்ணீர் டேங்க் அருகில் வியாழன் இரவு 12 மணியளவில்
TN 49 BY 3648 APACHE என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற இருசக்கர வாகனம் திருட்டு போயுள்ளது.வீட்டின் வாசலில் அன்வர் அவர்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்த இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இச்சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து அங்குள்ளவர்கள் கூறுகையில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிவருகின்றன.கடையை உடைத்து திருடுதல்,சில நாட்களுக்கு முன் தான் பள்ளி சிறுவனை கடத்த முயன்றார்கள்,மேலும் இதுகுறித்து அதிரையில் தொடரும் திருட்டு சம்பவங்கள் பல புகார்கள் காவல்துறையிடம் அளித்தாலும் அதற்கு உரிய நடவடிக்கைகள்,ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என குற்றம்சாட்டினார்கள்.இதற்குரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்காத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் கூறினார்கள்.
வாகனம் பற்றிய தகவல்