தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, சேலம், மதுரை, திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துபடுகிறது.
அதன்படி சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும்; சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும் முழுமையான ஊரடங்கு அமலாகிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும்.
முழு ஊரடங்கு காலத்தில் தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் செயல்படும் என்றும் கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி
தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி. முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 5 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம்போல் செயல்படும்; வங்கிகளில் 33% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு நெறிமுறைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.