Wednesday, February 19, 2025

ஜாகீர் நாயக்கை கைது செய்ய தீவிரம் காட்டும் மத்திய அரசு! விரைவில் இந்தியா அழைத்துவர முடிவு

spot_imgspot_imgspot_imgspot_img

மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. 

இதையடுத்து, அவரை விசாரணை வளையத்துக்குள் மத்திய அரசு கொண்டு வந்தது. சவூதி அரேபியாவில் இருப்பதாக கூறப்பட்ட ஜாகீர் நாயக் இந்தியா திரும்ப மறுத்துவிட்டார். ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டுதல், பயங்கரவாத நடவடிக்கை தடை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  

இந்தியாவில் வழக்கை எதிர்க்கொண்டு உள்ள ஜாகீர் நாயக் மலேசியாவில் தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது ஜாகீர் நாயக் விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது, “ஜாகீர் நாயக் விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முடியும் நிலையில் உள்ளது. இது முடிந்ததும் விரைவில் மலேசிய நாட்டு அரசுக்கு அதிகாரப்பூர்வமான கோரிக்கையை முன்வைப்போம். கோரிக்கை என்ன என்பது அடுத்த இரண்டு வாரங்களில் தெளிவாக தெரியும்,” என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...
spot_imgspot_imgspot_imgspot_img