Home » மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி…!

மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி…!

by admin
0 comment

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி.

கொரோனா ஊரடங்கு தொடர்ந்த நாள் முதல் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் மருத்துவர்கள் வருவது கிடையாது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் மருத்துவர்கள் வரவில்லை.

கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கூட மருத்துவர்கள் அவசர சிகிச்சைகள் செய்து வந்தனர்.இப்படியிருக்கையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் சாதாரண நோய்களுக்கு கூட பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயமாகிவிடுகிறது.சில நேரங்களில் அங்கு சென்றும் மருத்துவம் பார்க்க முடியாத சூழலும் ஏற்படுகிறது.இதனால் மல்லிப்பட்டிணம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

உடனடியாக இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter