Home » JJ.சாவண்ணா அவர்களின் இறப்பு,அதிரை மக்களின் பேரிழப்பு SDPI கட்சி இரங்கல்

JJ.சாவண்ணா அவர்களின் இறப்பு,அதிரை மக்களின் பேரிழப்பு SDPI கட்சி இரங்கல்

0 comment

அதிரை கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் J.J. சாவண்ணா காக்கா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் அதிரை மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர்.பொது வாழ்க்கையில் தன்னையே அர்ப்பணித்து பயணித்தவர். கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகத்திலும் பல காலம்  பயணித்ததோடு மட்டுமல்லாமல் திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர அவைத்தலைவராக இருந்தவர்.சமுதாய பிரச்சனைகளில் முதல் ஆளாய் நிற்க கூடிய ஒரு போராட்ட வாதி.அதிரையின் தேவைக்கும்,வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தரும் ஒரு நபர்.

அனைவரிடத்திலும் எளிமையாகவும்,இன்முகத்துடனும் பழகக்கூடியவர். SDPI கட்சியுடனான அவர்களின் தொடர்பு அளப்பரியது. அவர்களுடைய மறைவு அதிரை மக்களின் இழப்பாகவே இருக்கும்.

மர்ஹும் JJ. சாகுல் ஹமீது   அவர்களின் மறுமை சிறக்கவும் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு பொறுமையை நல்கிடவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோமாக!  

இப்படிக்கு,
N.முகமது புகாரி.MBA
மாவட்ட தலைவர்
தஞ்சை தெற்கு மாவட்டம்
SDPI கட்சி

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter