Home » அதிரையில் திடீர் ஆய்வை மேற்கொண்ட பேரூராட்சி அதிகாரிகள்

அதிரையில் திடீர் ஆய்வை மேற்கொண்ட பேரூராட்சி அதிகாரிகள்

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் சுமார் 100ககும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வை பேரூராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதில் கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றி அபராதங்களை விதித்தனர்.மேலும் முககவசம்,தனி மனித இடைவெளி,போன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கும் அபராதம் விதித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.இந்த ஆய்வில் சுமார் 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி. பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், மேற்பார்வையில், பேரூராட்சி துய்மைப் பணியாளர்கள் பணியினை மேற்கொண்டனர்.உரிய விதிமுறைகளை வியாபாரிகளும் பின்பற்ற வேண்டும் என்ற வேண்டிகோளையும் விடுத்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter