Home » பட்டுக்கோட்டையில் ATM கொள்ளை முயற்சி,திறம்பட பணியாற்றிய காவல்துறை

பட்டுக்கோட்டையில் ATM கொள்ளை முயற்சி,திறம்பட பணியாற்றிய காவல்துறை

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ் முக்கத்தில்  இன்று(ஜூன் 15) அதிகாலை 02:15 மணிக்கு  சந்தேகத்திற்கிடமாக சைக்கிளில் வந்தவரை   ரோந்து சென்ற காவலர் துரைராஜ் என்பவர் சைக்கிளை நிறுத்த சொன்னபோது வேகமாக தப்பித்து செல்ல முயற்சி செய்தவரை மடக்கிப்பிடித்து சந்தேகத்தின் பெயரில் பட்டுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில்   வைத்து விசாரணை செய்து வந்த நிலையில் இன்று(ஜூன் 15) காலை 8:45 மணிக்கு பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில்‌ உள்ள கனரா பேங்க் ATM உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து சென்று பார்த்தனர்.

பட்டுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில்  வைத்து விசாரிக்கப்பட்டு வந்த பட்டுக்கோட்டை சுண்ணாம்பு காரத்தெருவை சேர்ந்த 22 வயது வாலிபர் மதன்ராஜ்
என்பவர் ATM மிஷினை உடைப்பது அங்கே உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. 

மேற்கண்ட நபரை பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி விசாரணை செய்து வருகின்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter