தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு தட்டான்குளத்தில் நடக்கக்கூடிய பணிகளை அதிகாரிகள் இன்று(ஜூன்.16) ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அரசின் சார்பில் தட்டான் குளம் தூர்வாரப்பட்டு சுற்றிலும் மண் சரிவை தடுக்கும் வண்ணம் சிமெண்ட் கட்டைகள் கட்டப்பட்டு, சுற்றிலும் மக்கள் நடைபாதைக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் அழகிய பூங்காக்களுடன் கூடிய நடைபாதை அங்கு உருவாக்கப்பட உள்ளது.
மேற்படி பணிகள் நடந்து வரும் நிலையில் அங்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் திருமதி உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் கா. சுப்பையா, நகராட்சி செயற்பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் அறிவழகன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.