Sunday, February 8, 2026

மல்லிப்பட்டிணம் துறைமுக நுழைவு கட்டணம் இருமடங்கு வசூலிப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலான தொகை வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு.

மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு  வாகன நுழைவு கட்டணம்,டீ கடை ,இட்லி கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு கடந்த ஜூன்.12 அன்று ஏலம் விடப்பட்டது.அதில் ஒவ்வொரு வாகனத்திற்கேற்ப விலையை மீன்வளத்துறை அதிகாரிகள் நிர்ணயம் செய்தனர்.

அதனடிப்படையில் நான்கு சக்கர வாகனமான காருக்கு 25 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அதற்கு மாறாக 50 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இவ்வளவு கூடுதல் கட்டணமா என்று சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

மேலும் கூடுதல் கட்டணம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு நுழைவு வாயில்களிலும் நுழைவு கட்டணம் நிர்ணய பட்டியலை பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img