Home » முழு அடைப்பை வெற்றி பெறச்செய்வோம்முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர்அலி அறிக்கை

முழு அடைப்பை வெற்றி பெறச்செய்வோம்முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர்அலி அறிக்கை

by admin
0 comment

மத்திய அரசு நாட்டின் முதுகெலும்பாக திகழக்கூடிய விவசாயத்தை அழிக்கக்கூடிய மூன்று திருத்த மசோதாக்களை சமீபத்தில் தாக்கல் செய்தது..

பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இச்சட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக முனைப்பு காட்டியது..

இந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக
“டெல்லி சலோ”என்ற பெயரில் வட இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் தன்னெழுச்சியான இந்த போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது… கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அரசின் அடக்கு முறைகளுக்கு சற்றும் அஞ்சாமல் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளைய தினம் (8.12.20) முழுஅடைப்பு கோரிக்கை விடப்பட்டுள்ளது…

இக்கோரிக்கை இந்நாட்டிற்குரிய ஜீவாதார பிரச்சனைக்கான கோரிக்கை என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இந்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்து வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்…

செ.#ஹைதர்அலி.,
முன்னாள் தலைவர்
தமிழ் நாடு வக்ஃப் வாரியம்…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter