Home » முழு ஊரடங்கு எதிரொலி : அதிரையில் வெறிச்சோடிய சாலைகள்!(படங்கள்)

முழு ஊரடங்கு எதிரொலி : அதிரையில் வெறிச்சோடிய சாலைகள்!(படங்கள்)

0 comment

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 31/05/2021 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது ஒருசில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதிரையின் பிரதான சாலைகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பால் கடைகள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு காரணமாக பொதுமக்களும் வீடுகளைவிட்டு வெளியேறவில்லை. இதனால் அதிரையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. மேலும் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter