Home » அதிரை-பட்டுக்கோட்டை பொது போக்குவரத்து தொடங்கியது ! பயணிகள் உற்சாகம் !!

அதிரை-பட்டுக்கோட்டை பொது போக்குவரத்து தொடங்கியது ! பயணிகள் உற்சாகம் !!

0 comment

கொரோனா இரண்டாம் அலையில் தீவிரம் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளன.

கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி நடந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை பரிந்துரை பிரகாரம் கட்டுப்பாட்டுடன் பயணிகள் பேருந்தை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து இயக்கப்பட்டது, பயணிகள் முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் சமூக இடைவெளி விட்டு இருக்கையில் அமர வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நடத்துனர் விதிப்பார் எனவும் பயணிகள் ஒத்துழைப்பு வழங்க போக்குவரத்து அதிகாரிகள் கேட்டுகொண்டு உள்ளனர்.

பொது போக்குவரத்து இன்றுமுதல் செயல்பட தொடங்கியதை அடுத்து பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter