31ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அதிரை நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு வெறும் ஒரு டிராக்டர், ஒரு மினி லாரி மற்றும் 2 பேட்டரி மினி வாகனங்கள் மட்டுமே உள்ளன. வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களிடம் இருந்து இந்த வாகனங்களே குப்பைகளை பெற்று குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லுகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை வாகனங்கள் வரும் வரை மணிக்கணக்கில் தள்ளுவடிகளிலேயே வைத்துக்கொண்டு தூய்மை பணியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் தூய்மை பணியாளர்களின் மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நகராட்சி மன்றம் கவனத்தில் கொண்டு புதிய வாகனங்கள் வாங்கி தூய்மை பணியாளர்களின் நேரம் வீணடிக்கப்படுவதை தடுத்து அவர்களை பிற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய கூட்ட அரங்கு கட்டுவதற்கு ஆர்வம் காட்டும் அதிரை நகராட்சி, இனியாவது எது முதல் தேவை என்பதை அறிந்து செயல்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





