Home » மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரையர்கள் பங்கேற்பு!

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரையர்கள் பங்கேற்பு!

by
0 comment

47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைஃபிள் கிளப்பில்  ஜூலை 24 முதல் ஜூலை 31 வரை நடைபெற்றது.

இப்போட்டியை திருச்சி காவல்துறை ஆணையர் திரு.G.கார்த்திகேயன் இ.கா.ப., மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.M.பிரதீப் குமார் இ.ஆ.ப., ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.

இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1300 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் அதிரையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர் அலி 10M AIR PISTOL NR & ISSF பிரிவுகளில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றனர்.

இப்போட்டியில் RANGER OFFICER ராக பணியாற்றிய வஜீர் அலி அவர்களை பாராட்டி நினைவு பரிசினை காவல்துறை முன்னால் இயக்குனர் திரு.S.R.ஜாங்கிட் இ.கா.ப., , திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன் இ.கா.ப., , இந்திய ஒலிம்பிக் சங்க இணை செயலாளர் Dr.D.V. சீத்தாராம ராவ், திருச்சி ரைஃபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர் செல்வன் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter