Monday, February 2, 2026

அதிரை எம்.எம்.எஸ் குடும்பம் அரசியலில் தொடர வேண்டும்! ஜி.கே.வாசன் நேரில் வலியுறுத்தல்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் தமிழக அரசியலும் அரசு துறையிலும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பஷீர் அகமது கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் அவரது குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் அதிரைக்கு வந்த த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், எம்.எம்.எஸ் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், அதிரை எம்.எம்.எஸ் குடும்பமும் மூப்பனார் குடும்பமும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒரே குடும்பம் என உருக்கமாக தெரிவித்தார். மேலும் பஷீர் அகமதுவின் மறைவு தமிழ் மாநில காங்கிரஸுக்கு பெரும் இழப்பு என சுட்டிக்காட்டிய ஜி.கே.வாசன், எம்.எம்.எஸ் குடும்பத்தினர் தங்களின் முன்னோர்கள் போல் அரசியல் பணியை தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img