Home » சைக்கிளில் நேபாளம் செல்லும் திட்டத்தை கைவிட்ட அதிரை இளைஞர்! இது தான் காரணம்!!

சைக்கிளில் நேபாளம் செல்லும் திட்டத்தை கைவிட்ட அதிரை இளைஞர்! இது தான் காரணம்!!

by அதிரை இடி
0 comment

அதிரையை சார்ந்த அப்துல் ஹமீது மற்றும் முகம்மது பாய்ஸ் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிரையிலிருந்து லடாக் நோக்கிய தங்களது சைக்கிள் பயணத்தை துவங்கினர். கடந்த வாரம் இருவரும் லடாக் சென்றடைந்த நிலையில், முகம்மது பாய்ஸ் மட்டும் நேபாளம் செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. இதனால் அப்துல் ஹமீது மட்டும் தனியாக சைக்கிளில் ஊர் திரும்புவதாக அவரது நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், பலரது அறிவுறுத்தல்களை கருத்தில் கொண்டு தனது நேபாளம் நோக்கிய சைக்கிள் பயணத்தை கைவிடுவதாக முகம்மது பாய்ஸ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், தற்போது அப்துல் ஹமீதும் தானும் வெவ்வேறு இடங்களில் இருப்பதாக கூறும் முகம்மது பாய்ஸ், விரைவில் அப்துல் ஹமீதுடன் இணைந்து பயணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நேபாளம் செல்லும் முடிவை தான் கைவிட்டுவிட்டு, இவரும் ஒன்றாக அதிரைக்கு திரும்ப இருப்பதாக கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter