அதிரையில் தமிழக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரை வரவேற்பதற்காக விழா மேடையில் மைக்கை பிடித்து நிர்வாகிகள் கோஷமிட்டனர். ஆனால் அங்கு கூடியிருந்த பெரும்பான்மையான பாஜகவினர் பதில் கோஷம் எழுப்பாமல் அமைதியாக நின்றிருந்தனர். பின்னர் எச்.ராஜாவின் பேச்சை மேடையிலிருந்த நிர்வாகிகளை தவிர வேறு யாரும் கை தட்டி ரசிக்கவில்லை. மேலும் பேசிக்கொண்டிருக்கும் போது பேருந்து நிலையத்தில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு அனைந்ததற்கு அரசியல் காரணம் பூசிய எச்.ராஜாவின் பேச்சைக்கேட்டு அங்கு கூடியிருந்த மக்கள் வாய்விட்டு சிரித்தனர். பல்ப் அனைந்ததற்கு அரசியல் சாயம்பூச முயன்று எச்.ராஜா பல்ப் வாங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





