Home » 13வது வார்டுக்கு இருளில் இருந்து விடுதலை எப்போது..? : கவனிப்பாரா SDPI ன் கவுன்சிலர்!!

13வது வார்டுக்கு இருளில் இருந்து விடுதலை எப்போது..? : கவனிப்பாரா SDPI ன் கவுன்சிலர்!!

0 comment

அதிராம்பட்டினம் 13வது வார்டு SDPI கட்சியின் கவுன்சிலராக தேர்வாகி இருப்பவர் பெனாசிரா அஜாருதீன். இந்த வார்டுக்கு உட்பட்ட பணிகளை செய்து வரும் பொறுப்பை அவர் சார்ந்துள்ள SDPI கட்சி கண்காணித்து வருகிறது. ஆனால், கடந்த ஓருமாத காலமாகவே இருளில் மிதக்கும் 13 வது வார்டுக்கு உட்பட்ட மின் கம்பங்களில் மின் விளக்குகள் பழுதாகி இருள் சூழந்து காணப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சென்று வர மிகவும் அச்சப்படும் சூழலில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர் வரும் ரமலானை கருத்தில் கொண்டு பழுதாகி இருக்கும் மின் விளக்குகளை அகற்றி ஒளி மிகுந்த விளக்குகளை பொருத்தி இருளில் இருந்து விடுதலை பெற்று தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை எனும் SDPI கட்சியின் தாரக முழக்கத்திற்கு மத்தியில், அக்கட்சியின் கவுன்சிலர் 13வது வார்டு மக்களை இருளில் இருந்து விடுதலை பெறச் செய்வது எப்போது என அப்பகுதி மக்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter