Friday, April 26, 2024

சென்றுவா ரமளானே! கொண்டுசேர் அமல்களை!!

Share post:

Date:

- Advertisement -

அங்கமும் ஆன்மாவும் நோன்பிருந்துத்

தங்கமென புத்துணர்வை யூட்டி

தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி

நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி

கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்

கடமையைச் செய்ய கருணை வரவாய்

உடனிருந் தாயே உளம்நிறை தோழா

விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து

மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா

பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்

மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்

கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே

கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சக்காத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!

ஆக்கம்:

“கவியன்பன்” கலாம்,

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...