Home » சென்றுவா ரமளானே! கொண்டுசேர் அமல்களை!!

சென்றுவா ரமளானே! கொண்டுசேர் அமல்களை!!

0 comment

அங்கமும் ஆன்மாவும் நோன்பிருந்துத்

தங்கமென புத்துணர்வை யூட்டி

தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி

நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி

கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்

கடமையைச் செய்ய கருணை வரவாய்

உடனிருந் தாயே உளம்நிறை தோழா

விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து

மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா

பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்

மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்

கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே

கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சக்காத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!

ஆக்கம்:

“கவியன்பன்” கலாம்,

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter