அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வினை 196 மாணவர்கள் எழுதினர். இதில் 87 சதவீதம் அதாவது 170 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். +2 பொதுத்தேர்வில் அதிரையிலேயே அதிக பட்சமாக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில் 196 மாணவர்கள் தேர்வு எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தி அதில் 87சதவீதம் மாணவர்களை தேர்ச்சிபெற செய்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.