Wednesday, May 8, 2024

அதிரையில் திறமையற்ற நிர்வாகத்தால் நெடுஞ்சாலையே, குப்பை கிடங்காக மாறும் அவலம் – ஆட்சியருக்கு அதிரை IUML கடிதம் !

Share post:

Date:

- Advertisement -

நெடுஞ்சாலையை குப்பைகிடங்காக மாற்றிய நகராட்சி – ஆட்சியருக்கு அதிரை முஸ்லிம் லீக் நகர செயலாளர் கடிதம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் டன் கணக்கில் குப்பை சேர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.

மக்களின் வரிப்பணம் 1.5கோடி மதிப்பிலான மறு சுழற்சி மையமும் செயல்படாமல் தினந்தோறும் அள்ளப்படும் குப்பைகளை கொட்ட இடமில்லாமல் நகராட்சி நிர்வாகம் திண்டாடி வருகிறது இது திறமையற்ற நிர்வாகத்தையே காட்டுகிறது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிரை நகர செயலாளர் Z முகம்மது தம்பி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

அதில் அதிராம்பட்டினம் குப்பை கிடங்கில் மலை போல குப்பை நிரம்பி இருக்கிறது குப்பைகளை கொட்ட வழியின்றி நகராட்சி ஊழியர்கள் சாலைகளின் இரு மருகிலும் குப்பையை கொட்டி வருகிறார்கள் இதனால் ஆடுமாடு நாய்கள் அக்குப்பைகளை கிளறி வருகிறது இதனால் சாலைகளில் இறைந்து வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

பாதசாரிகளை நாய்கள் துரத்திகாயப்படுத்தி வருகிறது எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...