அதிராம்பட்டினம் CMPலைன் புதுமனை தெருக்களில் ஏராளமான வீடுகளில் ஆடுமாடு கோழி வளர்த்து வருகிறார்கள்.
இவர்களின் கால்நடைகள் அப்பகுதியில் மேய்ந்து விட்டு மாலை நேரங்களில் வீடு திரும்பிவிடும்.
இதனிடையே அகோர பசியில் அலைந்து திரியும் வெறிப்பிடித்த தெரு நாய்கள் ஆடு கோழிகளை வேட்டையாடி விடுகின்றன.
இதனால் சிறு முதலீட்டில் கால்நடைகளை பராமரித்து வரும் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வருகிறார்கள்.
அதன்படி இன்று மாலை ஒரு ஆட்டினை கடித்து குதறிய இரண்டு தெரு நாய்கள் தலையை துண்டித்து ருசித்திருக்கிறது.
இதனை பார்த்த அப்பகுதி இளைஞர் ஒருவர் நாய்களை விரட்டி இருக்கிறார்.
நகராட்சி நிர்வாகமே !
நாளுக்கு நாள் அதிகருக்கும் தெரு நாய் கடிகளில் இருந்து மக்களையும், கால் நடைகளையும் காக்க வேண்டும் வெறிபிடித்து திரியும் தெரு நாய்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.என்றும் நாய்கள் காப்பகம் ஏதுமிருந்தால் அங்கு கொண்டு சென்று விட அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.